யாழ். போதனா வைத்தியாசாலையில் ஒன்றரை வயது குழந்தை உட்பட யாழ். குடாநாட்டில் மேலும் 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று (ஜூன்-10) இரவு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகூட தரப்பில் இருந்து அருவி இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெற்றப்பட்டிருந்த 221 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு ஒன்றரை வயது குழந்தை மற்றும் அவரது தாயார் உட்பட மேலும் 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தயசாலையில் 23 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்களில் ஒன்றரை வயது பெண் குழந்தை மற்றும் தாயாருக்கும் (37 வயது) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத.
இவர்கள் தவிர 26 வயது யுவதி, 29 வயது இளைஞன் மற்றும் 77 வயதுடைய முதியவர் என ஐவருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனையில் மேலும்,
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 10 பேருக்கும்,
அளவெட்டி வைத்தியசாலையில் - 03 பேருக்கும்,
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் - 02 பேருக்கும்,
காரைநகர் வைத்தியசாலையில் - ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்யை தினம் யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் யாழ். மாவட்டத்தில் 116 பேர் உட்பட வடக்கில் மேலும் 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்